May 28, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளிகளின் ஹோக்கி அணி பாராட்டு விழா
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளிகளின் ஹோக்கி அணி பாராட்டு விழா

Share:

சிரம்பான், மார்ச்.25-

2025 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளிகளின் ஹோக்கி அணியின் பாராட்டு விழா, நேற்று சிரம்பான், கிளானா ரிசோர்ட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்பிரமணியம் கலந்து சிறப்பித்தார்.

கடந்த ஜனவரி மாதம் புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தேசிய ஹாக்கிப் போட்டியில் மகளிர் பிரிவில் நெகிரி செம்பிலான் அணியினர் சாம்பியனாக வாகை சூடினர். இதேபோன்று ஆண்கள் பிரிவில் நெகிரி செம்பிலான் அணியினர் 2 ஆவது மற்றும் 6 ஆவது இடத்திற்குத் தேர்வாகினர்.

மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாம்பியனாக வாகை சூடிய நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மகளிர் அணியினருக்கும், 2 மற்றும் 6 ஆவது இடத்திற்கு தேர்வான ஆண்கள் அணியிருக்கும் வீரப்பன் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

அதே வேளையில் ஏற்கனவே தாம் வாக்குறுதி அளித்ததைப் போல, இந்த பாராட்டு விழாவிற்கான 15 ஆயிரம் ரிங்கிட் செலவினத்தையும் வீரப்பன் தனது சொந்த செலவில் ஏற்றுக் கொண்டார்.

நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளிகளின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வை கோலபிலா தமிழ்ப்பள்ளி ஏற்பாடு செய்தது. கோலபிலா மாவட்ட கல்வி அதிகாரி ஹாஜி கமானிஸாம் பின் ஹாஜி திண்டிக், ஹோக்கி கழகத்தின் தலைவர் டோமினிக் சவரிமுத்து, ஆசிரியர்கள், ஹாக்கி பயிற்றுனர்கள், மாணவர்கள் என இந்த பாராட்டு விழாவில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது