Jun 30, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் வழக்கில் தீர்ப்பு தேதியில் மாற்றம்
தற்போதைய செய்திகள்

நஜீப் வழக்கில் தீர்ப்பு தேதியில் மாற்றம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.25-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக், தனது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கவிருந்த வேளையில் தீர்ப்புத் தேதியில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தீர்ப்பை முன்கூட்டியே கூறுவதற்கு ஏதுவாக தீர்ப்புத் தேதியை வரும் டிசம்பர் 22 ஆம் தேதிக்கு மாற்றி வைக்க உயர் நீதிமன்ற நீதிபதி லோக் யீ சிங் இன்று அனுமதி அளித்தார்.

இதன் வழி நஜீப்பிற்கு வீட்டுக் காவல் அனுமதிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து அடுத்த மாதம் 22 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று நீதிபதி லோக் யீ சிங் தெரிவித்தார்.

தம்முடைய எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை, வீட்டுக் காவலில் கழிக்க வேண்டும் என்று முன்னாள் மாமன்னர், தமக்கு கூடுதல் அரசாணை உத்தரவு ஒன்றை வழங்கியதாகக் கூறி, டத்தோ ஶ்ரீ நஜீப் தொடுத்திருந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரும், நஜீப் வழக்கறிஞரும் நேற்று தங்கள் வாதத் தொகுப்புகளைச் சமர்ப்பித்தனர்.

SRC Internasional நிறுவனத்திற்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடு புரிந்த குற்றத்திற்காக 72 வயது நஜீப், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியிலிருந்து சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு