Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பட்டதாரிகளை இழப்பது மலேசியாவின் வளர்ச்சியைப் பாதிக்கும் - பேராசிரியர் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

பட்டதாரிகளை இழப்பது மலேசியாவின் வளர்ச்சியைப் பாதிக்கும் - பேராசிரியர் எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

மலேசியாவைச் சேர்ந்த பட்டதாரிகள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து, அங்கு தமது எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதாக புத்ரா மலேசியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஹிடாயாதுல்லா முகமட் அலி கவலைத் தெரிவித்திருக்கிறார்.

அண்மைய காலமாக மலேசியா இப்படி ஒரு புதிய சவாலை எதிர்கொள்கிறது என்றும், அரசாங்கம் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஹிடாயாதுல்லா முகமட் அலி வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் கிடைக்கும் அதிகமான ஊதியம், தெளிவான வளர்ச்சிப் பாதை, ஊக்கமளிக்கும் பணியிடக் கலாச்சாரம் ஆகியவற்றால் ஈர்க்கப்படும் அவர்கள், அங்கேயே தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணத்துவம் வாய்ந்த பட்டதாரிகளை இழப்பது தேசத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் ஹிடாயாதுல்லா முகமட் அலி எச்சரித்துள்ளார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி