முன்னாள் பி.கே.ஆர். உதவித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மீண்டும் பி.கே.ஆர். கட்சியில் இணைந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாக உணரும் மூத்த தலைவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்த இரண்டு நாட்களிலேயே சேவியரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தாம் மீண்டும் பி.கே.ஆர். கட்சியில் இணைந்துவிட்டதை சேவியர் ஒரே வார்த்தையில் “ஆம்” என்று உறுதிப்படுத்தினார்.
2021-ஆம் ஆண்டு பி.கே.ஆர். எதிர்க்கட்சியாக இருந்தபோது கட்சியை விட்டு விலகிய சேவியர் , அப்போதைய பிரதமர் முஹிடின் யாசினை ஆதரித்தார்.
இதற்கிடையே, முன்னாள் உதவித் தலைவர் தியான் சுவாவும் மீண்டும் பி.கே.ஆர். கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது








