Jun 15, 2026
Thisaigal NewsYouTube
"பாஸ் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்கிறது" - பெர்சாத்து குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

"பாஸ் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்கிறது" - பெர்சாத்து குற்றச்சாட்டு

Share:

எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுதீன்-ஐ நியமித்தது தொடர்பாக, பாஸ் கட்சி முறையான ஆலோசனைகளை நடத்தவில்லை என்றும், அது பெரிக்காத்தான் நேஷனல் உச்ச மன்றத்தின் முந்தைய முடிவுக்கு முரணானது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாஸ் இந்த விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக பெர்சாத்து கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் டத்தோ துன் ஃபைசல் இஸ்மாயில் அஜிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் பார்ட்டி வாவாசான் நெகாரா கட்சிக்கு பெரிகாத்தான் நேஷனல் சின்னத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் அதே போன்ற முறையில் எடுக்கப்பட்ட முடிவு என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த இரண்டு அறிவிப்புகளும் பெரிகாத்தான் நேஷனலின் ஒற்றுமை மற்றும் ஒருமித்த கருத்து என்ற அடிப்படை கொள்கைகளை புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல், கூட்டணியின் அரசியலமைப்புக்கும் முரணாக உள்ளதாக துன் ஃபைசல் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணியில் உள்ள ஓர் உறுப்புக் கட்சியின் தலைவர், ஒருதலைபட்சமாக எடுத்துள்ள முடிவுகள், பெரிக்காத்தான் உயர்மட்டக் குழுவின் முந்தைய முடிவுகளுக்கு முரணாகவும், அக்குழுவின் முடிவை முன்கூட்டியே தீர்மானிப்பவை போலவும் அமைந்திருப்பதாகவும் துன் ஃபைசல் விமர்சித்துள்ளார்.

Related News

பள்ளிவாசல் கால்பந்து மைதானத்தில் நடந்த மோதல் சம்பவம் - போலீஸ் விசாரணை

பள்ளிவாசல் கால்பந்து மைதானத்தில் நடந்த மோதல் சம்பவம் - போலீஸ் விசாரணை

மலாக்காவில் 3000 ரிங்கிட் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு / 1000-த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு பரபரப்பை ஏற்படுத்திய வேலைவாய்ப்பு முகாம்

மலாக்காவில் 3000 ரிங்கிட் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு / 1000-த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு பரபரப்பை ஏற்படுத்திய வேலைவாய்ப்பு முகாம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களில் பெர்சாமா தனித்துப் போட்டி: கூட்டணிகள் வேண்டாம் என்கிறார் ரபிசி

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களில் பெர்சாமா தனித்துப் போட்டி: கூட்டணிகள் வேண்டாம் என்கிறார் ரபிசி

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பாதுகாப்புப் பணியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் களமிறக்கம்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பாதுகாப்புப் பணியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் களமிறக்கம்

கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

5 மாதங்களில் 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலை இழப்பு: அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரமணன் விளக்கம்

5 மாதங்களில் 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலை இழப்பு: அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரமணன் விளக்கம்