கடந்த நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரையிலானக் காலக் கட்டத்தில் 11.2 விழுக்காடு, அதாவது 302 டெங்கி சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் ராட்சி அபு ஹாஸ்ஸான் தெரிவித்தார்.
இந்தக் காலக்கட்டத்தில் டெங்கியால் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு 111, 417 டெங்கி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 84 பேர் டெங்கியால் உயிரிழந்துள்ளனர்.
அதே சமயம் கடந்த வாரத்தில் சிங்குன்யா நோயால் நால்வர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டு மொத்தம் 192 பேருக்கு இந்த நோய்த் தொற்று கண்டுள்ளது என்றார் ரட்சி.








