Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இலக்கிடப்பட்த் தரப்பினரைச் சென்றடைய கொள்முதல் முறைகளை மேம்படுத்த வலியுறுத்தியுள்ளது

Share:

ஜன.14-

சமையல் எண்ணெய் மானியங்களை முறையாக வழங்கவும், கசிவுகளைத் தடுக்க இலக்கிடப்பட்த் தரப்பினரைச் சென்றடைய கொள்முதல் முறைகளை மேம்படுத்தவும் Fomca எனப்படும் மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தற்போதுள்ள கொள்முதல் முறை எளிதில் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், வெளிநாட்டினர் மட்டுமின்றி வணிகர்களும் மானிய எண்ணெயைப் பயன்படுத்துவதாகக் Fomcaவின் பொருளாளர் Nur Asyikin Aminuddin குறிப்பிட்டார். இதனால், உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு எண்ணெய் கிடைப்பதில்லை. மானியங்களை இரத்து செய்துவிட்டு நிதி உதவி வழங்குவது அல்லது சிறப்பு அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்துவது போன்ற முன்மொழிவுகளை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றார்.

ஒரு கிலோ பாக்கெட் சமையல் எண்ணெய் 2 ரிங்கிட் 50 சென்னுக்கு விற்கப்படும் எண்ணெயில் மோசடியும் கசிவும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசாங்கத்திற்கு மில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும. சில வியாபாரிகளும் கடைக்கார்களும், எண்ணெய் வாங்க விரும்புவோர் வேறு சில பொருட்களையும் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிப்பதாகவும், இதனால் பயனீட்டாளர்கள் சிரமத்திற்கு ஆளாவதாகவும் Nur Asyikin கூறினார். இந்த வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தினார். PAKW எனப்படும் நியாயமான வாழ்க்கைச் செலவு அடிப்படையைப் பயன்படுத்தி, மானிய எண்ணெய் விநியோக முறையை மேலும் முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்