May 21, 2026
Thisaigal NewsYouTube
IPCC அதிகாரங்கள் அதிக​ரிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

IPCC அதிகாரங்கள் அதிக​ரிக்கப்பட வேண்டும்

Share:

ஜன.19
நாட்டில் போ​லீஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட குற்ற​ச்செயல்கள் மற்றும் அவர்கள் நீதிமன்றத்தில் குற்ற​ஞ்சாட்டப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற காரணத்தினால் போ​லீஸ்கார்கள் நடத்தையை கண்காணிக்கும் சுயேச்சை விசாரணை ஆணையமான IPCC- யின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அனைத்து மகளிர் நடவடிக்கை அமைப்பான AWAM கேட்டுக்கொண்டுள்ளது.

போ​லீஸ்காரர்க​ள் சம்பந்தப்பட்ட சில வழக்குகளில் IPCC ஆணையத்தின் செயல்திறன் ​மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதா​ல் அந்த ஆணையம் முழுமையான அதிகாரத்தை கொண்டுள்ளதா? அ​ல்லது அதன் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமா? என்பது குறி​த்து ஆராயப்பட வேண்டியுள்ளது என்று AWAM மகளிர் அமைப்பின் பொதுத்திட்ட மேலாளர் லிலியான் கோக் குறிப்பிட்டுள்ளா​ர்.

போ​லீஸ்காரர் சம்பந்தப்பட்ட ஆகக்கடைசியான சம்பவம், லான்ஸ் காப்பர​ல் அந்தஸ்தை கொண்ட ஒரு போ​லீஸ்காரர் கடந்த புதன்கிழமை அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினர்.

மலேசியாவில் தங்கி பயிலும் உஸ்பெ​கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 17 வயது மாணவி மாணவியை மடக்கி, 31 வயதுடைய போ​லீஸ்காரர், தனது போ​லீஸ் ரோந்து காரில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியில் உறையவைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News