ஜன.19
நாட்டில் போலீஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் அவர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற காரணத்தினால் போலீஸ்கார்கள் நடத்தையை கண்காணிக்கும் சுயேச்சை விசாரணை ஆணையமான IPCC- யின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அனைத்து மகளிர் நடவடிக்கை அமைப்பான AWAM கேட்டுக்கொண்டுள்ளது.
போலீஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட சில வழக்குகளில் IPCC ஆணையத்தின் செயல்திறன் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் அந்த ஆணையம் முழுமையான அதிகாரத்தை கொண்டுள்ளதா? அல்லது அதன் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமா? என்பது குறித்து ஆராயப்பட வேண்டியுள்ளது என்று AWAM மகளிர் அமைப்பின் பொதுத்திட்ட மேலாளர் லிலியான் கோக் குறிப்பிட்டுள்ளார்.
போலீஸ்காரர் சம்பந்தப்பட்ட ஆகக்கடைசியான சம்பவம், லான்ஸ் காப்பரல் அந்தஸ்தை கொண்ட ஒரு போலீஸ்காரர் கடந்த புதன்கிழமை அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினர்.
மலேசியாவில் தங்கி பயிலும் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 17 வயது மாணவி மாணவியை மடக்கி, 31 வயதுடைய போலீஸ்காரர், தனது போலீஸ் ரோந்து காரில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியில் உறையவைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.








