லஞ்ச ஊழல் தொடர்பில், மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நியத் தொழிலாளர்களைக் தருவிப்பதற்கு நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டது தொடர்பில், அமைச்சர் சிவக்குமாரின் முதிர் நிலை அதிகாரி என்று நம்பப்படும் அந்தச் சிறப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலையில், புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சரின் அலுவலகத்தில் எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், அந்தச் சிறப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்காக நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டு, மனிதவள அமைச்சின் அங்கீகாரம் பெறப்பட்டதில், சம்பந்தப்பட்ட சிறப்பு அதிகாரிக்குச் சுயநலன் சார்ந்த அம்சங்கள் இருப்பதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே அமைச்சர் சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டதை எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


