லஞ்ச ஊழல் தொடர்பில், மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நியத் தொழிலாளர்களைக் தருவிப்பதற்கு நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டது தொடர்பில், அமைச்சர் சிவக்குமாரின் முதிர் நிலை அதிகாரி என்று நம்பப்படும் அந்தச் சிறப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலையில், புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சரின் அலுவலகத்தில் எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், அந்தச் சிறப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்காக நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டு, மனிதவள அமைச்சின் அங்கீகாரம் பெறப்பட்டதில், சம்பந்தப்பட்ட சிறப்பு அதிகாரிக்குச் சுயநலன் சார்ந்த அம்சங்கள் இருப்பதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே அமைச்சர் சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டதை எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


