May 1, 2026
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழல்  மனிதவள அமைச்சர் சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழல் மனிதவள அமைச்சர் சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி கைது

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில், மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நியத் தொழிலாளர்களைக் தருவிப்பதற்கு நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டது தொடர்பில், அமைச்சர் சிவக்குமாரின் முதிர் நிலை அதிகாரி என்று நம்பப்படும் அந்தச் சிறப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலையில், புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சரின் அலுவலகத்தில் எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், அந்தச் சிறப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்காக நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டு, மனிதவள அமைச்சின் அங்கீகாரம் பெறப்பட்டதில், சம்பந்தப்பட்ட சிறப்பு அதிகாரிக்குச் சுயநலன் சார்ந்த அம்சங்கள் இருப்பதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே அமைச்சர் சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டதை எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி