Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளைக்கு காரணமாக இருந்தது பூனையா?
தற்போதைய செய்திகள்

கொள்ளைக்கு காரணமாக இருந்தது பூனையா?

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 23 -

டாமான்சாரா,பன்டார் உத்தாமா வில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்திற்கு பூனைகளை விற்கப்படும் முறையே காரணம் என்று நம்பப்படுகிறது. இதுக்குறித்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகின்றது.

இச்சம்பவம் குறித்து கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி பாதிக்கப்பட்ட 26 வயதுடைய ஆடவர் புகார் அளித்திருப்பதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட துணை போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ம் ஹுசின் சுலேஹுதீன் சோல்கிஃப்லை தெரிவித்தார்.

அந்த புகாரை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து கைத்தொலைபேசி, பிரிட்டிஷ் ஷார்ட் ஹேர் மற்றும் மஞ்ச்கின் ஆகிய பூனைகள், பூனையின் பைகள், ஹொன்டா சீவிக் வாகனத்தின் சாவி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக ஹுசின் சுலேஹுதீன் கூறினார்.

கைது செய்யப்பட்ட 27, 29 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக ஹுசின் சுலேஹுதீன் விளக்கினார்.

மேலும் அந்நபர்கள் குற்றவியல் சட்டம் 395 / 397 பிரிவின் கீழ் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹுசின் சுலேஹுதீன் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு