கோலாலம்பூர், பிப்ரவரி 28 -
ஓர் அமெரிக்க டாலருடன் ஒப்பிகையில் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 5 வெள்ளியை தாண்டுமானால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கும் என்று பி.கே.ர் எம்.பி. ஒருவர், இன்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு நினைவுவூட்டினார்.
ரிங்கிட்டின் தொடர் வீழ்ச்சி மற்றும் மிக மோசமான செயலாக்கம், நாட்டின் பொருளாதாரத்தை பாதித்து வரும் வேளையில் ரிங்கிட்டின் தற்போதைய மதிப்பு, ஓர் அமெரிக்க டாலருடன் ஒப்பிகையில் 5 வெள்ளியை தாண்டுமானால் நாட்டின் பொருளாதாரம் நலிவுறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன என்று சுபாங் எம்.பி.யான வொங் சென் நினைவுறுத்தினார்.
ரங்கிட்டின் தொடர் வீழ்ச்சியானது, அரசாங்கத்தின் தவறு அல்ல என்றாலும் மலேசிய பண மதிப்பின் பிரதான நாணயமாக விளங்கும் ரிங்கிட், தொடர்ந்து வீழ்ச்சியுறுவதை தடுக்க அரசாங்கம் உரிய வழிமுறைகளை ஆராய வேண்டும் என்று வொங் சென் கேட்டுக்கொண்டார்.
ரிங்கிட்டின் மதிப்பு 5 வெள்ளியை தாண்டாதவரை நமக்கு பாதுகாப்பு என்றாலும், முடிந்த வரையில் 5 வெள்ளியை தாண்டாமல் இருப்பதற்கு தேவையான் முன்னெடுப்புகளை இப்போது முதல் கொண்டு எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.








