மன்ஜோங்,ஜன.11
டிஏபி புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில டிஏபி ஆலோசகருமான ஙெ கூ ஹாம் மின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் எழுவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் தெரிவித்தார்.
பேரா,மஞோங், அருகில் ஆயெர் தாவார், தாமான் செமாராக் ஜெயா வில் உள்ள ஙெ கூ ஹாம்வீட்டில் நேற்று புதன்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று என்று அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோல் குண்டு வீச்சி நடந்த ஙெ கூ ஹாம் வீட்டிலிருந்து மலேசிய தீயணைப்பு, மீட்புப்படையினர் 11 வகையான தடயவியல் மாதிரிகளை சேகரித்துள்ளனர். அவற்றின் முடிவுக்காக போலீசார் காத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
தவிர ஙெ கூ ஹாம் வசித்து வரும் வீடமைப்புப்பகுதியில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் தெரிவித்தார்.








