May 27, 2026
Thisaigal NewsYouTube
உடனடியாக விசாரணை செய்வதற்கு ஜேபிஜே.விற்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

உடனடியாக விசாரணை செய்வதற்கு ஜேபிஜே.விற்கு உத்தரவு

Share:

கோலாலம்பூர், டிச. 24-


வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மலாக்கா, அலோர் காஜாவில் நேற்று இரவு நிகழ்ந்த கோர சாலைவிபத்தில் எழுவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 5 பிரதான வாகனங்கள் மீது உடனடியாக சோதனையிடுமாறு சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே.விற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

டிரெய்லர் லோரியிலிருந்து டயர் கழன்று, சுற்றுலா பேருந்தில் மோதி உயிர் பலி சம்பவத்திற்கு வித்திட்ட இந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள டிரெய்லர் லோரி, சுற்றுலா பேருந்து, ஒரு எம்.பி.வி. வாகனம் உட்பட 5 வாகனங்களின் நிலை குறித்து ஆராயும்படி அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் இரண்டு வயது ஆண்குழந்தை உட்பட எழுவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். எம்.பி.வி வாகனத்தில் பயணம் செய்த எண்மரில் ஐவர் உயிரிழந்த வேளையில் பேருந்தில் அதன் ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் மரணம் அடைந்தனர்.

சம்பந்தப்பட்ட வர்த்தக வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகள் இருக்குமானால் அந்த கனரக வாகனங்களின் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு