Apr 1, 2026
Thisaigal NewsYouTube
உடனடியாக விசாரணை செய்வதற்கு ஜேபிஜே.விற்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

உடனடியாக விசாரணை செய்வதற்கு ஜேபிஜே.விற்கு உத்தரவு

Share:

கோலாலம்பூர், டிச. 24-


வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மலாக்கா, அலோர் காஜாவில் நேற்று இரவு நிகழ்ந்த கோர சாலைவிபத்தில் எழுவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 5 பிரதான வாகனங்கள் மீது உடனடியாக சோதனையிடுமாறு சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே.விற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

டிரெய்லர் லோரியிலிருந்து டயர் கழன்று, சுற்றுலா பேருந்தில் மோதி உயிர் பலி சம்பவத்திற்கு வித்திட்ட இந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள டிரெய்லர் லோரி, சுற்றுலா பேருந்து, ஒரு எம்.பி.வி. வாகனம் உட்பட 5 வாகனங்களின் நிலை குறித்து ஆராயும்படி அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் இரண்டு வயது ஆண்குழந்தை உட்பட எழுவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். எம்.பி.வி வாகனத்தில் பயணம் செய்த எண்மரில் ஐவர் உயிரிழந்த வேளையில் பேருந்தில் அதன் ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் மரணம் அடைந்தனர்.

சம்பந்தப்பட்ட வர்த்தக வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகள் இருக்குமானால் அந்த கனரக வாகனங்களின் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்