எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பினாங்கு பாலத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தனது முதலாளியும், இதர இரண்டு நபர்களையும் சுட்டுக்கொன்ற மெய்க்காவலர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை / சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.
பிரபல வர்த்தகர் உட்பட அரசியல்வாதிகளான அஸ்மின் அலி மற்றும் நூருல் இஸா போன்றவர்களிடம் மெய்க்காவலராக பணியாற்றிவருமான 44 வயது Jaafar Halid என்ற நபருக்கு சிறைத்தண்டனையுடன் 12 பிரம்படித் தண்டனையும் விதிப்பதற்கு மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி Tengku Maimun Tuan Mat உத்தரவிட்டார்.








