கடந்த புதன்கிழமை, கோலாலம்பூர், ஜாலான் கோம்பாக்கில் மோட்டார் சைக்கிளோட்டியை மோதித் தள்ளிவிட்டு, தப்பிச் சென்ற நிசான் அல்மேரா வாகனமோட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அந்த நிசான் அல்மேரா வாகமோட்டி இதுவரையில் போலீஸ் புகார் செய்யவில்லை என்று கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் சுல்கஃபி சே லா தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளோட்டியை மோதி தள்ளிவிட்டு தப்பித்து விட்ட அந்த வாகனமோட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.








