Jul 4, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தும் - கம்போடியாவும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

தாய்லாந்தும் - கம்போடியாவும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

Share:

ஜித்ரா, ஜூலை.25-

தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் தத்தம் எல்லைப் பகுதிகளிலிலிருந்து இராணுப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்றிரவு அறிவித்தார்.

தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பூம்தாம் வேசாயாசா மற்றும் கம்போடியா பிரதமர் ஹுன் மானேட் ஆகியோருடன் நேற்று மாலை தொலைபேசியில் தாம் உரையாடியப் பின்னர் அவ்விருத் தலைவர்களும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டனர் என்று ஆசியான் கூட்டமைப்பின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

தமது அழைப்பை ஏற்று, போர் நிறுத்ததிற்கு உடன்பட்ட அவ்விரு அண்டை நாடுகளில் தலைவர்களுக்கும் தாம், நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

தாய்லாந்து - கம்போடியா நாடுகளிடையே எல்லை பிரச்சினையால் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 டை எட்டிய நிலையில் நேற்று இரு நாடுகளின் எல்லைப் பகுதியிலும் கடும் பதற்றம் நிலவியது. நேற்று மாலை வரை கம்போடியா ஆயதப் படைக்கும், தாய்லாந்து இராணுவப் படைக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

இரு நாடுகளின் எல்லையில் வீற்றியிருக்கும் இரண்டு பழங்கால கோயில்கள் இருக்கும் பகுதியில் இந்தச் சண்டை நிகழ்ந்தது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது