இஸ்ரேலுடனான உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புகீட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஷுஹைலி சயின் இவ்விவகாரம் குறித்து தெரிவிக்கயில், அந்த ஆடவர் 3 நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட ஜோகூர் பாரு மஜிஸ்திரெட் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கருத்துக்கள் அல்லது ஊகங்கள் எதுவும் பொது மக்களும் ஊடகங்களும் தெரிவிக்க வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.








