தஞ்சோங் சிப்பாட்டில் உள்ள ஒரு சீன கோயில் வளாகத்தில் மரத்தூண் சரிந்து விழுந்த விபத்தில், 17 வயது இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து நேற்று இரவு சுமார் 8.34 மணியளவில் தஞ்சோங் சிப்பாட் சுகாதார கிளினிக்கில் இருந்து போலீஸ்துறைக்கு தகவல் கிடைத்தது. முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளம் பெண் தனது குடும்பத்தினருடன் அந்த சீனக் கோயிலுக்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தாக போலீஸ் துறை தெரிவித்தது.
தலையில் பலத்த காயமடைந்து அவர், உடனடியாக சுகாதார கிளினிக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில் எவ்வித குற்றவியல் கூறுகளும் இல்லை என்றும், இதனை திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடெண்டண்ட் முகமட் அக்மல்ரிசால் ராட்ஸி தெரிவித்தார்.








