கடந்த 2015 ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறையில் இருந்த போது அவர், பிரமுகர் றையில் தங்க வைக்கப்பட்டதாகவும், அந்த அறையை கழுவி சுத்தம் செய்யுமாறு தாம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் முன்னாள் கைதி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலை மலேசிய சிறைச்சாலை மறுத்துள்ளது.
சுங்கை பூலோ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்ததாக கூறும் தன்னை அபாங் மாட் என்று கூறிக்கொண்ட அந்த நபர் கூறியுள்ள குற்றச்சாட்டில் அடிப்படையில்லை என்று மலேசிய சிறைச்சாலை இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.







