Jun 11, 2026
Thisaigal NewsYouTube
ரெம்பாவ்: ஆசிரியர் ஓட்டிய எஸ்யூவி வாகனம் மோதி 9 வயது சிறுவன் பலி
தற்போதைய செய்திகள்

ரெம்பாவ்: ஆசிரியர் ஓட்டிய எஸ்யூவி வாகனம் மோதி 9 வயது சிறுவன் பலி

Share:

நெகிரி செம்பிலான் மாநிலம், ரெம்பாவில், எஸ்யூவி வாகனம் மோதி, 9 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், வறிய மக்களுக்கான வீடமைப்புப் பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக ரெம்பாவ் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் அஸ்மி அலி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது 42 வயது ஆசிரியர் ஒருவர் ஓட்டிச் சென்ற எஸ்யூவி இரக வாகனமானது, லேகோங் உலு தேசியப் பள்ளியிலிருந்து பி.பி.ஆர்.டி குடியிருப்புப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலின் தாக்கத்தால் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பொந்தியானில் பள்ளிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து மாணவி காயம் - போலீஸ் விசாரணை

பொந்தியானில் பள்ளிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து மாணவி காயம் - போலீஸ் விசாரணை

ஜோ லோவுக்கு எதிரான கைது உத்தரவும், இண்டர்போல் சிவப்பு அறிவிப்பும் தொடர்ந்து அமலில் உள்ளது / சிங்கப்பூர் அதிகாரிகள் தகவல்

ஜோ லோவுக்கு எதிரான கைது உத்தரவும், இண்டர்போல் சிவப்பு அறிவிப்பும் தொடர்ந்து அமலில் உள்ளது / சிங்கப்பூர் அதிகாரிகள் தகவல்

பந்தாய் ரெமிஸ் அருகே விபத்து: காரில் இருந்து முற்றிலும் கருகிய நிலையில் சடலம் மீட்பு

பந்தாய் ரெமிஸ் அருகே விபத்து: காரில் இருந்து முற்றிலும் கருகிய நிலையில் சடலம் மீட்பு

அடுத்த பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு - அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு

அடுத்த பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு - அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு

வெளிநாட்டவர் கடைகள், விசா முறைகேடு: குடிநுழைவுத்துறை அதிரடி சோதனையில் 13 பேர் கைது

வெளிநாட்டவர் கடைகள், விசா முறைகேடு: குடிநுழைவுத்துறை அதிரடி சோதனையில் 13 பேர் கைது

குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த 32 சீனப் பிரஜைகளுக்கு RM322,000 ஆயிரம் அபராதம்

குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த 32 சீனப் பிரஜைகளுக்கு RM322,000 ஆயிரம் அபராதம்