தற்போதைய அரசாங்கத்தின் நிலைதன்மை தொடர்பாக அண்மைய அறிக்கைகள் குறித்து மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கவலை தெரிவித்துள்ளார்.
15வது பொதுத் தேர்தல் முடிந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 222 எம்.பி.க்களில் ஒரு தரப்பினர் இன்னும் நிலைத்தன்மையைத் தடம் புரள முயற்சிப்பவர்களாக உள்ளனர் என்று சுல்தான் குறிப்பிட்டார்.
சமூக ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ அல்லது சர்வதேச அளவில் நாடு ஒரு நிலைப்பாட்டில் இருந்தாலும், எம்.பி.க்களால் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்தாமல் போனால் அது ஆரோக்கியமற்றதாகும் என்று சுல்தான் குறிப்பிட்டார்.
"நம் நாட்டில் உள்ள 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நிலையை இன்னும் எவ்வளவு காலமத்திற்கு தாங்க வேண்டும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“பொருளாதாரம் மீட்கப்பட வேண்டும், மலேசியாவின் செழிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,” என்று சுல்தான் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


