தற்போதைய அரசாங்கத்தின் நிலைதன்மை தொடர்பாக அண்மைய அறிக்கைகள் குறித்து மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கவலை தெரிவித்துள்ளார்.
15வது பொதுத் தேர்தல் முடிந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 222 எம்.பி.க்களில் ஒரு தரப்பினர் இன்னும் நிலைத்தன்மையைத் தடம் புரள முயற்சிப்பவர்களாக உள்ளனர் என்று சுல்தான் குறிப்பிட்டார்.
சமூக ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ அல்லது சர்வதேச அளவில் நாடு ஒரு நிலைப்பாட்டில் இருந்தாலும், எம்.பி.க்களால் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்தாமல் போனால் அது ஆரோக்கியமற்றதாகும் என்று சுல்தான் குறிப்பிட்டார்.
"நம் நாட்டில் உள்ள 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நிலையை இன்னும் எவ்வளவு காலமத்திற்கு தாங்க வேண்டும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“பொருளாதாரம் மீட்கப்பட வேண்டும், மலேசியாவின் செழிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,” என்று சுல்தான் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கு பாலங்களின் கீழ் நுழைய தடை: எம்எம்இஏ கடும் எச்சரிக்கை

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்


