Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அடுத்த பருவத்தில் மான் சிட்டி எழுச்சி பெறும் - கார்டியோலா நம்பிக்கை

Share:

மான்செஸ்டர், பிப்.27-

மான்செஸ்டர் சிட்டி பிரிமியர் லீக்கில் முதலிடத்திற்குத் திரும்பும் என அதன் நிர்வாகி பெப் கார்டியோலா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். டோட்டன்ஹாமுக்கு எதிராக எர்லிங் ஹாலண்ட் அடித்த கோலின் வழி 1-0 என்ற கோல் கணக்கில் சிட்டி வெற்றி பெற்றதை அடுத்து அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.


ஹாலண்டின் 12வது நிமிட கோல், லீக் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியதால், அடுத்த பருவத்திற்கான சாம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெறும் வாய்ப்பை சிட்டி வலுப்படுத்திக் கொண்டது.
லிவர்பூல் இந்த சீசனில் பட்டத்தை வெல்வது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்னி ஸ்லாட்டிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த சிட்டி, கடந்த சில மாதங்களாக லீக் புள்ளிப் பட்டியலில் பின் தங்கியுள்ளது.


பிளே-ஆஃப்களில் ரியல் மாட்ரிட்டிடம் தோற்று சாம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்டியோலா இப்போது FA மட்டுமே இந்த சீசனில் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பாகக் கொண்டுள்ளார்.
இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் சிட்டி நிச்சயம் முதலிடத்திற்குத் திரும்பும். அணியில் வயதான வீரர்களைக் கொண்டிருக்கிறது, பல நிலைகளில் பிரீமியர் லீக் அனுபவம் இல்லாத ஆட்டக்காரகளும் இருக்கிறார்கள். எனினும் சிட்டி தனது பொற்காலத்திற்குத் திரும்பும் என்று கார்டியோலா நம்புகிறார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு