May 6, 2026
Thisaigal NewsYouTube
நடிகை ராஃபிடா இப்ராஹிம் உட்பட 4 பேர் கைது! பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க முயற்சி?
தற்போதைய செய்திகள்

நடிகை ராஃபிடா இப்ராஹிம் உட்பட 4 பேர் கைது! பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க முயற்சி?

Share:

கோலாலம்பூர், நவம்பர்.30-

கோலாலம்பூரில் கம்போங் சுங்கை பாரு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, நடிகையும் சமூக ஆர்வலருமான ராஃபிடா இப்ராஹிம் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது அமைதியைக் குலைக்கும் நோக்கத்துடன் கூடி, விழா நடந்த இடத்தில் கூச்சலிட்டு இடையூறு ஏற்படுத்திய போது, 39 முதல் 47 வயதுக்குட்பட்ட அந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர் என்று கோலாலம்பூர் காவற்படைத் தலைவர் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் ஒரு கலவரத்தைத் தூண்டுவதற்காக அவர்கள் கூடியதாகக் காவற்படைக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான மேலதிக விசாரணை தொடரும் என்று காவற்படை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கைது நடவடிக்கையானது குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒரு தடுப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டது என்றும் காவற்படை குறிப்பிட்டுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்