Mar 14, 2026
Thisaigal NewsYouTube
ஒரு லட்சம் கிலோ பால் மாவு பறிமுதல்
தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் கிலோ பால் மாவு பறிமுதல்

Share:

மக்கிஸ் எனப்படும் பினாங்கு மாநில தனிமைப்படுத்தல், சோதனை சேவை துறை ஒரு லட்சம் கிலோ எடை கொண்ட பால் மாவை பறிமுதல் செய்துள்ளது 6 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள அந்த பால் மாவை வட பட்டர்வர்த் கொள்கலன் துறை முகத்தில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் கைப்பற்றப்பட்டது என மக்கிஸ் இன் பினாங்கு மாநில இயக்குநர் இக்ராம் அப்துல் தாலிப் தெரிவித்தார்.

நேற்று மாலை 4.40 மணி அளவில் மக்கிஸ் நடத்திய சோதனையில் நெதர்லாந்து நாட்டில் இருந்து வந்த 4 கொள்கலன்களில் 4 ஆயிரம் பேக்கேட்டுகள் பால் மாவு கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றைத் தருவிக்கும் ஆவணங்களில் தவறானத் தகவலை இறக்குமதியாளர் கொடுத்திருப்பதாகத் தெரிவித்த இக்ராம், அந்தப் பால் மாவை உணவுப் பொருட்கள் தயாரிக்கவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைக்கும் விநியோகிக்கப்பட இருப்பதாகக் குறிப்பிட்டார்.

Related News