கோலாலம்பூர், பிப்ரவரி.25-
ரவாங் பெர்டானாவில் உள்ள உச்சிமலை கோயில் இன்று அதிகாலை இடிக்கப்பட்டதைக் கண்டித்துள்ள வழக்கறிஞர்கள் ராஜேஷ் நாகராஜன் மற்றும் Sachpreetraj Singh, கோயில் நிர்வாகம் தானாக முன்வந்து இடத்தை காலி செய்ததாகக் கூறப்படுவதையும் மறுத்துள்ளனர்.
"நீதிமன்ற உத்தரவு எதுவுமின்றி நிலத்தைக் காலி செய்யுமாறு கோயில் நிர்வாகம், வற்புறுத்தப்பட்டதாக கோயில் தலைவர் நேற்றுதான் போலீஸ்காரர்கள் புகார் அளித்துள்ளார். எனவே, அவர்கள் தானாக முன்வந்து காலி செய்தார்கள் என்று கூறுவது பொய்யானது மற்றும் அபத்தமானது," என்று அவ்விரு வழக்கறிஞர்களும் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்றி நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, வழிபாட்டுத் தலத்தை சட்டவிரோதமாக வெளியேற்றும் செயல் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், அருண் துரைசாமி கூறுகையில், நீதிமன்ற உத்தரவின்றி சிலைகளை அகற்ற கோயில் குழுவினர் மறுத்ததாகவும், ஆனால் பெருமளவில் குவிந்த போலீசாரின் அழுத்தத்திற்கு அவர்கள் ஆளானதாகவும் தெரிவித்தார்.








