ஒரு மாற்றுத் திறனாளியான மலேசியாவை சேர்ந்த 33 வயது முகமட் ஹவாரி ஹஷிம், எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து சாதனைப் படைத்துள்ளார். 8,848 மீட்டர் உயரத்தை கொண்ட உலகின் மிக உயரமான எவரெஸ்ட சிகரத்தில் நேற்று வியாழக்கிழமை நேபாள நாட்டின் நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் கால் பதித்து மலேசிய கொடியை பதித்து, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். முகமட் ஹவாரியின் இந்த சாதனை நேபாள நாட்டின் முன்னணி பத்திரிகையான தெ ஹிமாலயா தைம்ஸ்ஸில் செய்தியாக வெளிவந்துள்ளது. பினாங்கை சேர்ந்த முகமட் ஹவாரி யின் இந்த சாதனையானது, மாற்றுத் திறனாளிகளும் உலகளாவிய நிலையில் சாதனையை படைக்க முடியும் என்ற புதிய செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது எவரெஸ்ட் முன்னோடித் திட்டத்தின் இயக்குநர் நிவேஷ் கார்கி தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


