கோலாலம்பூர், ஜன - 10
மலேசியர்களின் ஆரோக்கியத்திற்காக சுகாதார அமைச்சகம் பல்வேறு வியூக திட்டமிடல், சுகாதார முன்முயற்சிகளுக்கான நிதி ஆகியவற்றை வழங்கி மக்களை பாதுகாக்கின்றனர்.
இதன் அடிப்படையில் மடானி மருத்துவ திட்டம் (SPM) மற்றும் பெக்கா பி40 திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 1.2 மில்லியனுக்கு மேலாக பி40 பிரிவை சேர்ந்த மக்கள் தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெற்று கொண்டனர்.
பெக்கா பி40 திட்டம் நிறுவப்பட்ட போது இது தொற்றா நோய்களில் கவனம் செலுத்தும் வகையில் சுகாதார அமைச்சகம் குறைந்த வருமானத்தை பெரும் பிரிவினருக்கு அறிமுகப்படித்தினர்.
PeKa பி40, SPM ஆகியவை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக சுகாதார அமைச்சகம் வலியுறுத்துகிறது.
இதில் இன்னும் பதிவு செய்து கொள்ளாதவர்கள் விரைவில் பதியுமாறும் அரசாங்கம் வழங்கப்படுகின்ற இத்தகைய சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சகம் கேட்டு கொண்டது.








