Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அபாயகரமாக வாகனங்கள் செலுத்தப்பட்டதில் இருவர் காயம்

Share:

கோலாலம்பூர், ஜன.30-

சீனப்புத்தாண்டுக்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு, கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில் ஒரு கேளிக்கை மையத்தின் முன்புற சாலையில், திரைப்படத்தில் வருவதைப் போல மிக அபாயகரமாக படுவேகத்தில் இரு வாகனங்கள் செலுத்தப்பட்டு, மற்ற வாகனங்களை கண்மூடித்தனமாக மோதித் தள்ளியதில் இருவர் காயமுற்றனர்.

இந்த சம்பவத்தில் Toyota Hilux வாகனமும், Toyota Vios காரும் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த பயங்கரச் சம்பவத்தை அந்த கேளிக்கை மையத்திற்கு வெளியே குழுமியிருந்தவர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சாலையோரத்தில் நின்ற வாகனங்களை மோதியதில் இருவர் காயமுற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது வாகனம் படுவேகத்தில் செலுத்திய போது, அதனைத் தடுப்பதற்கு பொது மக்கள் ஓடிய போதிலும், அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்துவதில் அவர்கள் தோல்விக் கண்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மஷாரின்மான் கூ மாமூட் உறுதிப்படுத்தினார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்