Aug 11, 2026
Thisaigal NewsYouTube
10,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தப்படும்
தற்போதைய செய்திகள்

10,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தப்படும்

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.18-

கல்வி முறையில், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக வரும் 2027ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தப்படுவதை கல்வி அமைச்சு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதன் அமைச்சர் பாஃட்லீனா சீடேக் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் செயல்பாட்டு மையங்களை கல்வி தொழில்நுட்பத்திற்கான சிறந்த மையங்களாக மேம்படுத்துவது உட்பட துணைத் திட்டங்களையும் கல்வி அமைச்சு தயாரித்து வருவதாக பாஃட்லீனா கூறினார்.

வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டுகளைப் பொருத்துவதற்கான இலக்கு நிறைவேற்றப்படும் என்று பாஃட்லீனா நம்பிக்கைத் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற பினாங்கு பள்ளிகளுக்கான ஸ்மார்ட் போர்டுகளை ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி