ஜூலை 13-
தேசிய முன்னணியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக்கொண்ட பிறகு, ஆட்சி மாற்றம் நிகழும் என பாஸ் கட்சியை சேர்ந்த டான் ஸ்ரீ அன்னூர் மூசா முன்வைத்திருக்கும் கூற்று.
அவரது அக்கூற்று, நாட்டை நிர்வகிப்பதில் கவனம் செலுத்திவரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்முக்கு அழுத்தங்களை வழங்குவதற்கான முயற்சியே தவிர, அது ஒரு போதும் சாத்தியமாகாது என மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் மஸ்லான் அலி தெரிவித்தார்.
நடப்பில், கட்சித் தாவல் தடுப்பு சட்டம் அமலில் உள்ளதால், EN BLOC அடிப்படையில், தேசிய முன்னணி கூட்டாக ஆதரவை மீட்டுக்கொண்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.
தற்போதைக்கு, அம்னோவும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடியும் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக்கொள்ள எண்ணம் கொண்டிருக்காததை மஸ்லான் அலி சுட்டிக்காட்டினார்.








