கோலாலம்பூர், மார்ச்.08-
மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானம் மாயமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், Ocean Infinity நிறுவனம் மேற்கொண்ட இரண்டாம் கட்டத் தேடுதல் பணிகளிலும் எவ்வித உறுதியான தடயங்களும் கிடைக்கவில்லை என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வரை சுமார் 7 ஆயிரத்து 571 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நவீன தொழில்நுட்பங்களுடன் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும், விமானத்தின் இருப்பிடம் குறித்த மர்மம் நீடிக்கிறது. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த தகவல்களை உடனுக்குடன் வழங்க மலேசிய அரசு உறுதியளித்துள்ள வேளையில், இந்தச் சம்பவம் உலக விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு தீர்க்கப்படாத சவாலாகவே இருந்து வருகிறது.








