Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய NG MERS 999 அவசர பதிலளிப்பு சேவை அறிமுகம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய NG MERS 999 அவசர பதிலளிப்பு சேவை அறிமுகம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.17-

மலேசியாவில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதிய அவசர பதிலளிப்பு சேவையை, Telekom Malaysia Berhad உடன் இணைந்து தொடர்புத்துறை அமைச்சு நேற்று அமல்படுத்தியது.

ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த MERS 999 அவசர பதிலளிப்பு சேவைக்குப் பதிலாகத் தற்போது NG MERS 999 என்ற அடுத்த தலைமுறை அவசர பதிலளிப்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவையானது, அவசர அழைப்புகளுக்கு, வேகமாகவும், துல்லியமாகவும் பதிலளிக்கக் கூடியது என்று Telekom Malaysia தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வழக்கம் போல் 999 என்ற அவசர அழைப்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றாலும் கூட, SaveME999 என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் போது காணொளி அழைப்புகள் உள்ளிட்ட கூடுதலான வசதிகளைப் பெறுவார்கள்.

குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் காணொளி வாயிலாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ அவசர பதிலளிப்பு சேவை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் Telekom Malaysia தெரிவித்துள்ளது.

இந்த NG MERS 999 சேவையானது நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய MERS 999- சேவையின் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகம் என்றும் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

மலேசியாவில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய NG MERS 999 அவசர ப... | Thisaigal News