நாட்டின் தேசிய மலையேறும் வீரரான ஆர்.ஜே. நாகராஜன், எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து, உலகில் உள்ள ஏழு உயரமான மலைகளையும் ஏறிய இரண்டாவது மலேசியர் என்ற பெருமையையும் பெற்று புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
59 வயதுடைய நாகராஜன் மலேசிய நேரப்படி நேற்று நண்பகல் 12.45 மணியளவில் 8, 848 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக கால் பதித்து இச்சாதனையைப் படைத்துள்ளார்.
தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள உலகின் மிக உயர்ந்த ஏழு மலைகளை ஏறி நாகராஜன் நாட்டிற்கு பெருமையை ஈட்டித்தந்துள்ளார்.
இவருக்கு முன்னதாக, டத்தோ முகமட் முகராபின் மொக்தர்ருடீன் என்பவர் உலகின் ஏழு உயரமான சிகரங்களையும் ஏறி முதல் சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


