நாட்டின் தேசிய மலையேறும் வீரரான ஆர்.ஜே. நாகராஜன், எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து, உலகில் உள்ள ஏழு உயரமான மலைகளையும் ஏறிய இரண்டாவது மலேசியர் என்ற பெருமையையும் பெற்று புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
59 வயதுடைய நாகராஜன் மலேசிய நேரப்படி நேற்று நண்பகல் 12.45 மணியளவில் 8, 848 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக கால் பதித்து இச்சாதனையைப் படைத்துள்ளார்.
தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள உலகின் மிக உயர்ந்த ஏழு மலைகளை ஏறி நாகராஜன் நாட்டிற்கு பெருமையை ஈட்டித்தந்துள்ளார்.
இவருக்கு முன்னதாக, டத்தோ முகமட் முகராபின் மொக்தர்ருடீன் என்பவர் உலகின் ஏழு உயரமான சிகரங்களையும் ஏறி முதல் சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

Related News

பகாங்கில் முதல் முறையாக நடமாடும் கால்நடை மருத்துவமனை அறிமுகம்

தேசத் துரோகத் தண்டனைக்கு எதிராக கிஜால் சட்டமன்ற உறுப்பினர் அப்பீல்

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்


