Mar 12, 2026
Thisaigal NewsYouTube
குவாந்தானில் 2 பொழுதுபோக்கு மையங்களில் 65 பேர் கைது !
தற்போதைய செய்திகள்

குவாந்தானில் 2 பொழுதுபோக்கு மையங்களில் 65 பேர் கைது !

Share:

பகாங், குவாந்தானில் உள்ள ஜாலான் கம்புட் சாலையில் அமைந்திருக்கும் இரு பொழுதுபோக்கு மையங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட 65 பேர் தடுப்புக் காவலுக்காகக் கைது செய்யப்பட்டனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கிய Operasi Pusat Hiburan dan Operasi Noda சோதனையில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பெண்கள் உட்பட 16 பேர் 21 முதல் 44 வயதுக்கு உட்பட்ட மலேசியர்கள் என குவாந்தான் மாவட்டக் காவல் துறை தலைவர் எசிஸ்டன் காமிஷனர் வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

எஞ்சியோரில் 10 பேர் வங்காளதேசிகள், 39 பேர் 21 முதல் 49 வயதுக்கு உட்பட்ட சீனா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் எனவும் அவர் தகவல் வெளியிட்டார்.

அதே சமயம், 6 கைப்பேசிகள், 6 துண்டுகள், வணிக ஆவணங்கள், ரொக்கப் பணம் 8 ஆயிரத்து 740 வெள்ளி ஆக்யவற்றையும் காவல் துறை கைப்பற்றி உள்ளது.

முதற்கட்ட சிறுசீர் சோதனையில் 9 மலேசியர்களும் ஒரு வெளிநாட்டுவாசியும் போதைப் பொருள் உட்கொண்டது உறுது செய்யப்பட்டது.

இந்தச் சோதனை நடவடிக்கையில் பேரா மாநில காவல் துறையால் தேடப்பட்டு வந்த ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக வான் முகமட் ஜஹாரி குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டுவாசிகள் அனைவரும் குடிஎஉழைவுச் சட்டத்தின் பல்வேறு உட்பிரிவுகளின் அடிப்படையிலும் போதைப் பொரு
ள் தடுப்புச் சட்டப்படியும் விசாரிக்கப்படுவர் எனவும் வான் முகமட் ஜஹாரி கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு