Jul 4, 2026
Thisaigal NewsYouTube
திட்டமிட்டக் கொள்ளைச் சம்பவம் போல் தெரியவில்லை
தற்போதைய செய்திகள்

திட்டமிட்டக் கொள்ளைச் சம்பவம் போல் தெரியவில்லை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.07-

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் உள்ள தங்கள் வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்த பத்து பேர் கொண்ட கும்பல் தனது கணவர் ஞானராஜாவைத் தாக்கிய சம்பவம், திட்டமிட்டு கொள்ளையடிக்க வந்த கும்பலைப் போல் தெரியவில்லை என்று அந்த தொழில் அதிபரின் மனைவி கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 6.30 மணிக்கும் 7.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், இயல்பான கொள்ளைச் சம்பவம் போல் இல்லை என்று கீதாஞ்சலி குறிப்பிட்டார்.

இது ஒரு கொள்ளைச் சம்பவம்தான் என்று முன்கூட்டியே முடிவுக்கு வந்து விட முடியாது. காரணம், சம்பந்தப்பட்ட நபர்கள் நடத்திய தாக்குதல் மற்றும் அவர்கள் எச்சரித்த விதம் அனைத்தையும் பார்க்கும் போது, கொள்ளையடிக்கும் போர்வையில் தங்களை மிரட்ட வந்த கும்பல் போல் தெரிகிறது.

அந்த நபர்கள் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த போது சில விநோதச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றைத் தம்மால் அம்பலப்படுத்த இயலாது என்று கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

எனினும் வழக்கு ஒன்றில் தமது கணவர் முக்கிய சாட்சியாக இருப்பதால் தமது கணவருக்கும், தங்கள் குடும்பத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு அவசியமான ஒன்று என்று கீதாஞ்சலி குறிப்பிட்டுள்ளார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்