Jan 18, 2026
Thisaigal NewsYouTube
செந்தூலில் விபத்து: வாகனத்தால் மோதப்பட்ட மூதாட்டி மரணம்
தற்போதைய செய்திகள்

செந்தூலில் விபத்து: வாகனத்தால் மோதப்பட்ட மூதாட்டி மரணம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.13-

கோலாலம்பூர், ஜாலான் செந்தூல் மார்கெட் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் 69 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

காலை சுமார் 9:30 மணியளவில், செந்தூல் மார்கெட் அருகே மூதாட்டி சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.

இதில் பலத்த தலைக்காயமடைந்த அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர் என்று கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் ஸம்ஸூரி முஹமட் இசா தெரிவித்தார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றதால், இது வாகனமோட்டி தப்பியோடிய விபத்தாகக் கருதப்படுகிறது. செந்தூல் மாவட்ட போலீஸ் துறை தற்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன், விபத்தைக் கண்ணுற்ற சாட்சிகள் யாராவது இருந்தால் முன்வந்து தகவல் தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் 41 ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்