கம்போடியா தலைநகர் நோம்பெனில் நேற்று நிறைவு பெற்ற 32 ஆவது தென்கிழக்காசிய விளையாட்டான சீ போட்டியில் மலேசியாவின் தரம் வீழ்ந்தது. 40 தங்கத்தை கைப்பற்றும் இலக்குடன் 676 தடகள வீரர்கள் களம் இறக்கப்பட்ட நிலையில் மலேசியாவினால் 34 தங்கம், 45 வெள்ளி மற்றும் 97 வெண்கலம் மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
64 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா மிக மோசமான அடைவு நிலையைப் பதிவு செய்து இருப்பது இதுவே முதல் முறையாகும். 11 நாடுகளில் மலேசியா 7 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா ஆறாவது இடத்தைப் பிடித்த நிலையில் தற்போது ஒரு படி பின்தள்ளப்பட்டது.
சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளை விட மலேசியா பின்தங்கியது. இப்போட்டியில் வியட்நாம், 136 தங்கம், 105 வெள்ளி மற்றும் 114 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

Related News

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்


