Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வெட்டு, கொலை வழக்குகளில் தொடர்புடையதாக நம்பப்படும் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

வெட்டு, கொலை வழக்குகளில் தொடர்புடையதாக நம்பப்படும் இருவர் கைது

Share:

கடந்த நவம்பர் 6 ஆம் தேதி மலாக்கா, ஆயேர் மோலேக், கம்போங் புக்கிட் புன்புன்னில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்ததோடு ஒரு நபரை வெட்டிய சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மதியம் 12 மணியளவில் கார் சக்கரம் பழுது பார்க்கும் கடையில் இருந்து இச்சம்பவம் குறித்து ஒரு பெண்ணின் தொலைபேசி அழைப்பு மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.

40 முதல் 49 வயதுடைய அந்த சந்தேக நபர்கள் சக்கரத்தில் இருந்து உலோகத்தைப் பிரிக்க அதனை எரியூட்டிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ட் அர்ஷத் அபு தெரிவித்தார்.

விசரித்த போது, 500 வெள்ளி மதிப்புள்ள பயன்படுத்தப்பட்ட சக்கரத்தின் முகப்பு, பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமான பொருட்கள் உட்பட காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் காவல் துறையால் கைப்பற்றப்பட்டது. மேலும் ஒருவரை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு நீளமான பாராங் கத்தியும் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

அவ்விருவருக்கும் பல்வேறு குற்றப் பின்னணி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு நாளை அலோர் கஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!