Apr 1, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் எரிசக்தி விநியோகம் இதுவரை பாதிக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

நாட்டின் எரிசக்தி விநியோகம் இதுவரை பாதிக்கப்படவில்லை

Share:

கூச்சிங், ஏப்ரல்.02

நேற்று சிலாங்கூரில் உள்ள புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடித்ததைத் தொடர்ந்து நாட்டின் எரிசக்தி விநியோகம் இதுவரை பாதிக்கப்படவில்லை. இந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிவாயு விநியோகம் குறைந்திருந்தாலும், மின்சார விநியோகம் இன்னும் நிலையாக உள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ பஃடில்லா யூசோப் கூறினார். தற்போதுள்ள குழாய்கள் மூடப்பட்டவுடன், பெட்ரோனாஸ் எரிவாயு விநியோகத்தைப் பெறுவதற்கான மாற்று வழிகளைத் தேடுகிறது என்று எரிசக்தி, நீர் மாற்ற அமைச்சருமான அவர் கூறினார். குறிப்பாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் மின்சாரம் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக டீசல் அல்லது நிலக்கரி எரிபொருளைக் கொண்டு இயங்கும் பழைய மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவது போன்ற அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் கேபிள்கள் குறித்து பாஃடில்லா கூறுகையில், இதுவரை அவை பாதிக்கப்படவில்லை, ஆனால் பெட்ரோனாஸுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதியில் மின் கேபிள்களின் ஒருங்கிணைந்த தணிக்கையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். அனைத்து உள்கட்டமைப்புகளும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த டிஎன்பி கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள கேபிள்கள் தற்போது சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் காப்புறுதி மூலமாகவோ அல்லது முழு விசாரணைக்குப் பிறகோ உதவிக்கான வடிவம் பெட்ரோனாஸால் இறுதிச் செய்யப்படும் என்றார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்