உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, சீனியின் உச்சவரம்பு விலையை அரசாங்கம் விரைவில் அதிகரிக்கும் என சர்க்கரைத் தொழில்துறையினர் நம்புகின்றனர்.
முன்னதாக, சீனியின் சில்லறை விலை உச்சவரம்பை அகற்றுவது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனி சுத்திகரிப்புத் தொழில்துறையினர் கூறினர். 2013 தொடங்கி வெறும் 1 சென் மட்டுமே இது வரை உயர்த்தப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. .
இப்போது நடப்பில் உள்ள விலையை தொழில் துறையினர் நிலைக்கச் செய்ய முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டிருக்கிறது என எம்எஸ்எம் மலேசியா ஹோல்டிங்ஸ் பிஎச்டி,இன் தலைமைச் செயல்முறை அதிகாரி ஷெட் ஃபெய்சால் ஷெட் முஹமாட் தெரிவித்தார்.
எனவே, இந்த விவகாரத்தில் அரசாங்கத்தை கடந்த் 30 மாதங்களில் 50 முறை சந்திப்பு நடத்தியதாகவும் உடனடி தீர்வை எடுக்கும் என தமது தரப்பு நம்புவதாக ஷெட் ஃபெய்சால் தெரிவித்தார்.







