தம்முடன் கொண்டிருந்த காதலை முறித்துக்கொண்டார் என்பதற்கான தனது காதலியை கத்தியால் குத்தி காயப்படுத்தி விட்டு, தப்பிய ஆடவர் ஒருவர், பத்து நாள் தேடலுக்கு பின்னர் ஜோகூர், பண்டார் டத்தோ ஆன் னில் பிடிபட்டார்.
கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அம்பாங்கில், புக்கிட் அந்தாரபங்சா வில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 41 வயதுடைய நபர், நேற்று காலை 5 மணியளவில் ஜோகூர்பாருவில் சுல்தான் இஸ்கந்தர் பள்ளி வாசல் வளாகத்தில் பிடிபட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஆசம் இஸ்மாயில் தெரிவித்தார். ஜோகூர்பாருவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு வேலையற்ற நபரான அந்த சந்தேகப்பேர்வழி, ஏற்கனவே இரண்டு முறை சிறைக்கு சென்றவர் ஆவார். விசாரணைக்கு ஏதுவாக அவர் நான்கு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆசம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

Related News

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்


