தம்முடன் கொண்டிருந்த காதலை முறித்துக்கொண்டார் என்பதற்கான தனது காதலியை கத்தியால் குத்தி காயப்படுத்தி விட்டு, தப்பிய ஆடவர் ஒருவர், பத்து நாள் தேடலுக்கு பின்னர் ஜோகூர், பண்டார் டத்தோ ஆன் னில் பிடிபட்டார்.
கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அம்பாங்கில், புக்கிட் அந்தாரபங்சா வில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 41 வயதுடைய நபர், நேற்று காலை 5 மணியளவில் ஜோகூர்பாருவில் சுல்தான் இஸ்கந்தர் பள்ளி வாசல் வளாகத்தில் பிடிபட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஆசம் இஸ்மாயில் தெரிவித்தார். ஜோகூர்பாருவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு வேலையற்ற நபரான அந்த சந்தேகப்பேர்வழி, ஏற்கனவே இரண்டு முறை சிறைக்கு சென்றவர் ஆவார். விசாரணைக்கு ஏதுவாக அவர் நான்கு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆசம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


