தம்முடன் கொண்டிருந்த காதலை முறித்துக்கொண்டார் என்பதற்கான தனது காதலியை கத்தியால் குத்தி காயப்படுத்தி விட்டு, தப்பிய ஆடவர் ஒருவர், பத்து நாள் தேடலுக்கு பின்னர் ஜோகூர், பண்டார் டத்தோ ஆன் னில் பிடிபட்டார்.
கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அம்பாங்கில், புக்கிட் அந்தாரபங்சா வில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 41 வயதுடைய நபர், நேற்று காலை 5 மணியளவில் ஜோகூர்பாருவில் சுல்தான் இஸ்கந்தர் பள்ளி வாசல் வளாகத்தில் பிடிபட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஆசம் இஸ்மாயில் தெரிவித்தார். ஜோகூர்பாருவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு வேலையற்ற நபரான அந்த சந்தேகப்பேர்வழி, ஏற்கனவே இரண்டு முறை சிறைக்கு சென்றவர் ஆவார். விசாரணைக்கு ஏதுவாக அவர் நான்கு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆசம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு

ஆசிரியை மரணம்: ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கோரிக்கை வலுக்கிறது

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது


