Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மித்ராவின் 10 கோடி வெள்ளி எவ்வாறு பயன்படுத்தப்படும்? குலசேகரன் தலைமையில் விளக்கம் கோரப்படும்
தற்போதைய செய்திகள்

மித்ராவின் 10 கோடி வெள்ளி எவ்வாறு பயன்படுத்தப்படும்? குலசேகரன் தலைமையில் விளக்கம் கோரப்படும்

Share:

இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவிற்கு 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 10 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டை, பிரதமர் துறையின் கீழ் உள்ள மித்ரா நிர்வாகம், இந்தியர்களின் மேம்பாட்டிற்கு எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பது குறித்து, நாடாளுமன்றத்தில் வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது.
ஈப்போ பாராட் எம்.பி. எம். குலசேகரன் தலைமையில் இந்திய சமுதாயத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மித்ராவின் நிர்வாக இயக்குநர் ரவீந்திரன் நாயரிடம் விளக்கம் கோர விருக்கிறனர். இந்த விளக்கம் அளிப்புக்கூட்டத்திற்கு அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ முகமட் ஜூகி அலி அனுமதி அளித்துள்ளார்.
இதன் தொடர்பில் வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்குமாறு மித்ரா தலைமை இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக குலசேகரன் தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இந்த பத்து கோடி வெள்ளி நிதியை, இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு மித்ரா என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு செலவிடப்பட வேண்டும்? அது எவ்வாறு வழிநடத்தப்பட வேண்டும் போன்ற விவகாரங்களை மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயருடன் எம்.பி.க்கள் விவாதிக்கவிருப்பதாக குலசேகரன் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்