கோவிட் 19 நோய்தொற்று சமீப காலமாக அதிகரித்து வருவதை குறித்து,மை செஜாத்ரா - வை மீண்டும் அமல்படுத்த பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சகத்தை கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் 19 அதிகரிப்பதனை குறித்து சுகாதார அமைச்சகம் ஆராய்வது மட்டுமல்லாமல் இருப்பிடம், மற்ற நோயாளிகளின் புள்ளி விவரங்களையும் கண்டறியுமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், முன்னாள் துணை சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஒங் கியான் மிங் வலியுறுத்தினர்.
தனியார் மற்றும் பொது மருத்துவமனைகளில் மீண்டும் தடுப்பூசிகளை அமல்படுத்த தொடங்குவதுடன் புதிய பூஸ்தர் தடுப்பூசியினை கொண்டு வர செயல்படுத்துமாறும் அவர்கள் தெரிவித்தனர்.
கோவிட் 19 குறித்து புள்ளி விவரங்களையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைகளையும் அன்றாடம் வெளியிட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்குமாறு கைரி ஜமாலுடின் மற்றும் ஒங் கியான் மிங் கேட்டு கொண்டனர்.








