Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் கடற்கரையில் எரிந்த கார் ஒன்றிலிருந்து கருகிய நிலையில் சடலம் மீட்பு!
தற்போதைய செய்திகள்

ஜோகூர் கடற்கரையில் எரிந்த கார் ஒன்றிலிருந்து கருகிய நிலையில் சடலம் மீட்பு!

Share:

பத்து பஹாட், செப்டம்பர்.25-

நேற்று ஜோகூர் செங்காராங், பந்தாய் சுங்கை லூருஸ் கடற்கரையில், எரிந்து கொண்டிருந்த கார் ஒன்றை அணைக்கச் சென்றிருந்த தீயணைப்பு படையினர், அதனுள் ஓட்டுநர் இருக்கையில் முற்றிலும் எரிந்த நிலையில் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர்.

72 வயது மதிக்கத்தக்க அந்நபர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பத்து பஹாட் காவல்துறை தலைமை உதவி ஆணையர் ஷாருலனுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.

திடீர் மரணமாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பான மேல் விசாரணைக்காக, அச்சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அதே வேளையில், இச்சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் ஷாருலனுவார் முஷாடாட் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து