கோலாலம்பூர், மார்ச்.06-
அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றது மற்றும் நாட்டின் நிலைத்தன்மைக்குச் சதி செய்தது தொடர்பான புகார்கள் குறித்து, அடையாளம் காணப்பட்ட மூன்று நபர்களிடம் போலீஸ் துறை வாக்குமூலம் பெற்றுள்ளது.
இந்தச் சதியில் செல்வாக்குமிக்க ஒரு நபர் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்றுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்த விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.
கோலாலம்பூர், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.
பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மேலும் சில நபர்களிடமும் விசாரணை நடத்த போலீஸ் துறை திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சதியில் தொடர்புடையதாகக் கருதப்படும் அந்தச் 'செல்வாக்குமிக்க நபரை' இன்னும் போலீஸ் துறை விசாரணைக்காக அழைக்கவில்லை என்று ஐஜிபி விளக்கினார்.








