தாப்பா,ஜன.9
ஆடவர் செலுத்திய லோரி ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்ற டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இச்சம்பவம் இன்று காலை 5.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுங்சாலையின் 314.5 ஆவது கிலோ மீட்டரில் தாப்பா அருகில் நிகழ்ந்தது.
முஹமாட் ரிட்சுவான் சுலாய்மான் என்று அடையாளம் கூறப்பட்ட 44 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், வாகனத்தின் இடிபாடுகளுக்கு சிக்கிக்கொண்டதால் அவரின் உடலை மீட்பதற்கு போலீசார், தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியை நாடினர்.
சம்பந்தப்பட்ட நபர் கோலாலம்பூரிலிருந்து ஈப்போவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதென்டன் முஹமாட் நாயிம் அஸ்னாவி தெரிவித்தார்.








