Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்

Share:

புத்ராஜெயா, ஜாலான் பெர்சியாரான் உதாரா, 5.7 ஆவது கிலோமீட்டரில் 12 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று புதன் கிழமை காலை 10.14 மணியளவில் நிகழ்ந்தது.வேகக்கட்டுப்பாட்டை இழந்த லோரி ஒன்று அந்த 11 வாகனங்களை மோதியதாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், இதர 11 வாகனங்களில் பயணித்தவர்களும் சம்பந்தப்பட்ட இடத்தில் லே தவுர் டே லங்காவி சைக்கிளோட்டப் பயணத்திற்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்மாதி அப்துல் அஜீஸ் தெரிவித்தார். 25 மற்றும் 39 வயதுடைய அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் அடையாளம் கூறினார்.

Related News