கோத்தா பாரு, ஜாலான் கம்பூங் ஸ்ரீ கூலிம், மேலோர் என்ற இடத்தில் உள்ள கைப்பேசி கடையில் நுழைந்து கொள்ளையிட்டதாக நம்பப்படும் மூன்று சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோடாரி, வெட்டுக்கத்தி ஆகியவற்றை ஆயுதமாக கொண்டு, அக்கடைக்குள் நுழைந்து, பணியாளர்களை அச்சுறுத்தி, கைப்பேசிகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டதாக கூறப்படும் அந்த மூன்று சகோதரர்கள் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கோத்தாபாரு மாவட்ட போலீஸ் தலைவர் எ சி பி ரோஸிடி டவுட் தெரிவித்தார்.
19 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று சகோதரர்கள் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


