கோத்தா பாரு, ஜாலான் கம்பூங் ஸ்ரீ கூலிம், மேலோர் என்ற இடத்தில் உள்ள கைப்பேசி கடையில் நுழைந்து கொள்ளையிட்டதாக நம்பப்படும் மூன்று சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோடாரி, வெட்டுக்கத்தி ஆகியவற்றை ஆயுதமாக கொண்டு, அக்கடைக்குள் நுழைந்து, பணியாளர்களை அச்சுறுத்தி, கைப்பேசிகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டதாக கூறப்படும் அந்த மூன்று சகோதரர்கள் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கோத்தாபாரு மாவட்ட போலீஸ் தலைவர் எ சி பி ரோஸிடி டவுட் தெரிவித்தார்.
19 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று சகோதரர்கள் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


