Dec 5, 2025
Thisaigal NewsYouTube
கொலையாளியைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

கொலையாளியைப் போலீஸ் தேடுகிறது

Share:

தாப்பா, ஜூலை.14-

பேராக், தாப்பாவில், ஜாலான் பஹாங் சாலையின் ஓரத்தில் பாதாளத்தில் கடந்த சனிக்கிழமை ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பபட்டச் சம்பவத்தை போலீசார் கொலை என்று வகைப்படுத்தியுள்ளனர்.

இதன் தொடர்பில் கொலையாளியைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்தார்.

ஒரு மழுங்கிய பொருளினால், அந்த நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலை, முகம், மார்பகம், முதுகு முதலிய பகுதிகளில் கடும் வீக்கம் காணப்பட்டுள்ளது.

அரைக்கால் காற்சட்டையும், ஒரு டீ சட்டையையும் அணிந்த நிலையில் அந்த ஆடவரின் சடலம் 13 மீட்டர் பாதாளத்தில் தலைக்குப்புறக் கிடந்தது, வழிப்போக்கர்கள் கண்டுபிடித்து தகவல் அளித்ததாக ஜொஹாரி யாஹ்யா தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்