Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கம்போடிய கடத்தல் கும்பலிடம் சிக்கிய மலேசியர் - பசிக்கு பன்றி இறைச்சி, மின்சாரத்தால் தாக்கி தினமும் சித்ரவதை!
தற்போதைய செய்திகள்

கம்போடிய கடத்தல் கும்பலிடம் சிக்கிய மலேசியர் - பசிக்கு பன்றி இறைச்சி, மின்சாரத்தால் தாக்கி தினமும் சித்ரவதை!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.29-

கம்போடியாவில் மனிதக் கடத்தல் கும்பலிடம் சிக்கி மீட்கப்பட்ட 36 வயதான மலேசியர் ஒருவர், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தான் மிகுந்த சித்ரவதைக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளார்.

'ஜோ' என்று அழைக்கப்படும் அவர், சாத்தே தயாரிப்பாளராகப் பணியாற்ற, கம்போடியாவுக்குச் சென்றதாகவும், தனக்கு மாதம் 6,300 ரிங்கிட் ஊதியம் அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம், அங்கு சென்ற பின்னரே, தான் மனிதக் கடத்தல் கும்பலிடம் சிக்கியது அவருக்குத் தெரிய வந்துள்ளது.

கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவ்விடத்தில், உணவாக பன்றி இறைச்சி வழங்கப்பட்டு, தினமும் மின்சாரம் கொண்டு தாக்கி சித்ரவதை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாதம் 50,000 ரிங்கிட் முதல் 1 லட்சம் ரிங்கிட் வரையில் இணைய மோசடி வேலைகள் செய்வதற்காகத் தாங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மலேசிய வெளியுறவுத் துறையின் முயற்சியால் இதுவரை 5 மலேசியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை